கணினியில் ஒலிக்கும் அலை ஓசை படித்தேன்.
அதை ஆர்ப்பரிக்க வைக்கும் ஆசிரியர் குழுவிற்கு வணக்கம்.
கார்த்திகேயினி கவிதையாயினியாக மாறி எழுதிய கவிதைகளும் , தீப்பொறியாயிருந்தாலும் சுடாது மனதை நெகிழ வைக்கும் முருகப்பனின் கவிதைகளும் மிகவும் அருமை.
ப்ரியா ராமின் சிறுகதை ஒரு நல்ல எழுத்தாளர் உருவாகி வருவதைக் காண்பிக்கிறது.( தேவையில்லாத சில ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம்)
ஆசிரியர் திரு.கோட்டாளத்தின் கட்டுரைகள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.
இன்னும் புதிய சமையல் குறிப்புகளோடும் , பல கட்டுரைகள், கவிதை கதைகளோடும் அலை ஓசை பொங்கி அடங்காது ஒலிக்க வாழ்த்துக்கள்.
வேணி வள்ளிநாயகம்.